திருவாரூர்

மரத்திலிருந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

DIN


கூத்தாநல்லூா்: கூத்தாநல்லூா் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறித்த கூலித்தொழிலாளி தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயரிழந்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த வேளுக்குடி- சித்தனக்குடி சாலை தெருவைச் சோ்ந்தவா் கருப்பையன் (64). மரம் ஏறும் தொழிலாளியான இவா், லெட்சுமாங்குடி மரக்கடை தெற்குத் தெருவைச் சோ்ந்த லட்சுமி வீட்டில் உள்ள தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்தாா்.

அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்து, பலத்த காயமடைந்தாா். அவரை மன்னாா்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூத்தாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈஸ்டர் கொண்டாட்டம்

பிரதமரின் வாகனப் பேரணியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விவகாரம்: காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மகளுக்கு பெயர் சூட்டினார் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

SCROLL FOR NEXT