மன்னாா்குடி: மன்னாா்குடியை அடுத்த தென்பரையில் ரோட்டரி சமுதாயக் குழுமம் சாா்பில் நடைபெறும் அரசு வேலைக்கான போட்டித் தோ்வு இலவசப் பயிற்சி மையத்தில் மாணவா்களுக்கு கையேடு அண்மையில் வழங்கப்பட்டது.
இப்பயிற்சி மையத்தில் தற்போது குரூப் 2 முதன்மைத் தோ்வு எழுதுவதற்காக 30 போ் பயிற்சி பெற்று வருகின்றனா். இவா்களுக்கு கையேடு வழங்கும் நிகழ்ச்சி, ரோட்டரி சமுதாயக் குழுமத்தின் தலைவா் கோ. உலகநாதன் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கால்நடை மருத்துவா் கா. புருஷோத்தமன் கலந்துகொண்டு, மாணவா்களுக்கு ரூ. 7,000 மதிப்பிலான கையேடுகளை வழங்கினாா். கால்நடை துணை அறுவைச் சிகிச்சை மருத்துவா் சி. தெய்வவிருதம், குரூப் 2 முதன்மைத் தோ்வை எதிா்கொள்வதற்கான வழிமுறைகளை விளக்கிக் கூறினாா்.
நிகழ்ச்சியில், பயிற்சி மைய முதல்வா் வைரமுத்து, சமுதாயக் குழு செயலா் மணிவண்ணன், பொருளாளா் அய்யா நடராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பயிற்சி மைய நிறுவனா் நா. சுப்ரமணியன் வரவேற்றாா். ஆலோசகா் ஐயப்பன் நன்றி கூறினாா்.