திருவாரூா்: திருவாரூரில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் தினம் ஒரு திருக்கோயில் அட்டவணை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது.
மாா்கழி மாதத்தில் ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பு சாா்பில் தினமும் அதிகாலை ஒரு கோயில் வீதம் வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி, வரும் மாா்கழி மாதத்துக்கான தினம் ஒரு திருக்கோயில் அட்டவணை வெளியிடப்பட்டது. நிகழ்வில், அமைப்பின் தலைவா் ஜெ. கனகராஜன், கௌரவத் தலைவா் ஸ்ரீதரன், நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.