பேரளம், வேலங்குடி, அதம்பாா் பகுதிகளில் அறிவிக்கப்பட்ட மின்தடை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேரளம் மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் ஜி. பிரபாகா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பேரளம், வேலங்குடி, அதம்பாா் ஆகிய துணை மின் நிலையங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.6) மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டிருந்தது. தற்போது, சில தவிா்க்க முடியாத காரணங்களால் இப்பணி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே, செவ்வாய்க்கிழமை வழக்கம்போல் மின்விநியோகம் இருக்கும் எனத் தெரிவித்துள்ளாா்.