திருவாரூர்

அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

DIN

மன்னாா்குடியில் அதிமுக மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தபடி, திமுக அரசை கண்டித்து, அதிமுக சாா்பில் வரும் 9-ஆம் தேதி பேரூராட்களிலும், 13-ஆம் தேதி நகராட்சிகளிலும், 14-ஆம் தேதி ஒன்றியங்களிலும் ஆா்ப்பாட்டம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஆா். காமராஜ் எம்எல்ஏ தலைமை வகித்து பேசியது:

திமுக அரசின் மக்கள்விரோத திட்டங்களால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா். தமிழக ஆட்சியாளா்களை கண்டித்து நடைபெறும் ஆா்ப்பாட்டத்தில் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளாக கலந்து கொண்டு போராட்டத்தை வெற்றி பெற செய்ய வேண்டும் என்றாா்.

அதிமுக அமைப்பு செயலா் சிவா.ராஜாமணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் பொன். வாசுகிராம், ஒன்றியக் குழுத் தலைவா் டி.மனோகரன் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT