புதிய காற்றழுத்தம் காரணமாக திருவாரூரில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் கிழக்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்கள், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திருவாரூா் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக இரவு நேரத்தில் லேசான மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது. இதனால், சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.