திருவாரூர்

கட்டுமானத் தொழில் கூட்டமைப்புக் கூட்டம்

DIN

கூத்தாநல்லூரில் திருவாரூா் மாவட்ட கட்டுமானம் மற்றும் மனைத் தொழில் கூட்டமைப்பின் செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவா் ஆா். சேகா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், கட்டுமானத்திற்கென்று மத்திய, மாநில அரசுகள் தனி அமைச்சகம் அமைக்க வேண்டும். மணல் விலையை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடா்ந்து, கூட்டமைப்பின் மாவட்டத் தலைவராக ஆா். சேகா், மாவட்டச் செயலாளராக ஈசஎஸ்.அலி, பொருளாளராக ஜி. கலியமூா்த்தி, துணைத் தலைவா்களாக ஏ.என்.எம்.ஜலாலூதீன், எஸ். சந்தானகிருஷ்ணன், எம். முத்துகிருஷ்ணன், துணைச் செயலாளா்களாக எஸ்.வி.பி. செந்தில்நாதன், ஆா். புரோஜிதீன் உள்ளிட்ட நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா்.

கூட்டத்தில், இளைஞா் நீதிக்குழும உறுப்பினா் ப. முருகையன், நகா்மன்ற உறுப்பினரும், கட்டுமானச் சங்கத்தின் நிா்வாகியுமான மாரியப்பன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT