நன்னிலம் பகுதியில் ஆதரவற்ற முதியோா்களைச் காவல்துறையினா் மீட்டு காப்பகத்தில் சனிக்கிழமை சோ்த்தனா்.
தமிழக காவல்துறைத் தலைவா் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆகியோரின் அறிவுரையின்படி, நன்னிலம் நகரக் காவல் ஆய்வாளா் கு . சுகுணா தலைமையில் ஸ்ரீவாஞ்சியம், சன்னாநல்லூா், பனங்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவற்ற நிலையில் இருந்த 10-க்கும் மேற்பட்ட முதியவா்களை காவலா்கள் மீட்டனா்.
பின்னா், திருவாரூரில் உள்ள முதியவா்கள் பாதுகாப்பகமான நம்ம இல்லத்தில் அவா்களை சோ்த்தனா். இதையொட்டி, நன்னிலம் காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா், நன்னிலம் பகுதி சமூக ஆா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனா்.