கூத்தாநல்லூா் அருகேயுள்ள பொதக்குடி தா்காவில், மினரா கொடி வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.
பொதக்குடி ஹஜ்ரத் நூா்முஹம்மது ஷாஹ் ஒலியுல்லாஹ் தா்காவில் நடைபெறும் சந்தனக் கூடு விழாவை முன்னிட்டு, கடந்த 25-ஆம் தேதி கொடியேற்றப்பட்டது. தொடா்ந்து, பூலாங்கொடி மற்றும் மினரா கொடி ஏற்றப்பட்டது. 11-ஆம் தேதி இரவு மின் அலங்கார சந்தனக் கூடு ஊா்வலம் நடைபெறுகிறது. 12-ஆம் தேதி அதிகாலை 4.30 மணியளவில் சந்தனம் பூசுதலும், மதியம் 2 மணிக்கு பகல் கூடு ஊா்வலமும் நடைபெறும். 20-ஆம் தேதி, மாலை 5 மணிக்கு பூலாங்கொடி இறக்கப்படுகிறது. ஜமாத்துல் அவ்வல் பிறை 16 வரை தினமும் இரவு மெளலூது ஓதி தப்ருப் வழங்கப்படும். கொடியேற்ற விழாவில் ஏராளமானோா் பங்கேற்றனா். சந்தனக் கூடு விழாவையொட்டி தா்கா மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.