திருவாரூா், அடியக்கமங்கலத்தில் சனிக்கிழமை (டிச.3) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருவாரூா் மற்றும் அடியக்கமங்கலம் துணை மின்நிலையங்களில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், இங்கிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா், அடியக்கமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்ளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா், கொரடாச்சேரி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.