திருவாரூா் மாவட்டத்தில் இருந்து 1,000 டன் நெல் அரவைக்கு திருநெல்வேலிக்கு வியழக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டம் அசேஷம், தெற்குநத்தம், இடையா்நத்தம், கோவிலூா் ஆகிய ஊா்களில் உள்ள திறந்தவெளி சேமிப்பு மையங்களில் இருப்பு வைக்கப்பட்ட 1,000 டன் பொதுரக நெல் நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு லாரிகளில் கொண்டுவரப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில் மூலம் திருநெல்வேலிக்கு அரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.