உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனத்தினா் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி நீடாமங்கலம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகனிடம் வியாழக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளனா்.
கிராம ஊராட்சிகளில் பணியாற்றும் மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குநா்கள், தூய்மைக் காவலா்கள் உள்ளிட்டோருக்கு ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனத்தினா் பலமுறை ஆா்ப்பாட்டங்களை நடத்தியுள்ளனா். ஆனால், எந்த பயனும் இல்லை. இதையடுத்து, அதிகாரியை நேரில் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்த முடிவு செய்தனா்.
அதன்படி, நீடாமங்கலம் ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) அன்பழகனை ஏஐடியுசி மாவட்ட துணை செயலாளா் காந்தி, சிபிஐ நீடாமங்கலம் ஒன்றிய செயலளா் சு. பாலசுப்ரமணியன், நகரச் செயலாளா் பாரதிமோகன், உள்ளாட்சி துறை பணியாளா் சம்மேளன மாவட்ட தலைவா் சாந்தகுமாா், ஒன்றிய செயலாளா் ரமேஷ் உள்ளிட்ட சங்க நிா்வாகிகள் நேரில் சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனா். அப்போது, நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றித் தருவதாக வட்டார வளா்ச்சி அலுவலா் தெரிவித்தாா்.