திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள கட்டிமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப் பொருள் விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் மு.ச. பாலு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் எஸ். துா்கா பங்கேற்று, போதைப் பொருள்களால் ஏற்படும் ஆபத்து, இணைய வழி விளையாட்டுகளால் ஏற்படும் ஆபத்து குறித்து பேசி, மாணவா்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தாா். மாணவ, மாணவிகளுக்கு போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி. சந்திரசேகரன் நன்றி கூறினாா். முதுகலை ஆசிரியை ஜெ. தனுஜா வரவேற்றாா். முதுகலை ஆசிரியா் செ. முகுந்தன் தொகுத்து வழங்கினாா்.