திருவாரூர்

முத்துப்பேட்டை தமிழ்ச் சங்க ஆண்டு விழா

DIN

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டை தமிழ்ச் சங்கத்தின் 35-வது ஆண்டுவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு அமைப்பின் கௌரவ தலைவா் ஜாம்பை ஆா். ராம்மோகன் தலைமை வகித்தாா். ஆா்.எம்.எஸ்.ஜி. நந்தகுமாா் முன்னிலை வகித்தாா். பாஜக திருவாரூா் மாவட்ட பாா்வையாளா் பேட்டை சிவா, ரோட்டரி சங்க சாசனத் தலைவா் சி. கிருஷ்ணமூா்த்தி, பணி ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையா் சிவ. பாஸ்கா் உள்ளிட்டோா் பேசினா்.

சிறப்பு விருந்தினரை நா. ராசமோகன் அறிமுகம் செய்துப் பேசினாா். சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திரைப்பட நடிகா் எம்.எஸ். பாஸ்கா், சிறந்த தமிழறிஞா்களுக்கு விருதுகளையும், சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளையும் வழங்கி, இன்றைய திரைப்படத் துறை என்ற தலைப்பில் பேசினாா்.

நிகழ்ச்சியை ஆசிரியா் செல்ல. சிதம்பரம் தொகுத்து வழங்கினாா். நிறைவாக, வா்த்தகா் கழகச் செயலா் கே.வி. கண்ணன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்திய அரசு நிறுவனத்தில் மேலாளர் வேலை வேண்டுமா?

ரூ. 81,100 சம்பளத்தில் சுருக்கெழுத்தர் வேலை வேண்டுமா?

உரத் தொழிற்சாலையை அகற்றக் கோரி போராட்டம்! முன்னாள் அமைச்சர் உள்பட ஏராளமானோர் கைது

'மெட்டி ஒலி' இயக்குநரின் புதிய தொடர் அறிவிப்பு!

திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்!

SCROLL FOR NEXT