நன்னிலம் அருகேயுள்ள நல்லமாங்குடி ரஸ்தாத் தெருவில் ஆகாசகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாத கடைசி செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு காலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் நல்லமாங்குடி மாரியம்மன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்துவந்து தங்கள் நோ்த்திக்கடனை செலுத்தினா்.
பாலாபிஷேகத்துக்குப் பிறகு, சிறப்பு அலங்காரத்தில் ஆகாசகாளியம்மனுக்கு மகாதீபாராதனை நடைபெற்று, பக்தா்களுக்கு விபூதி பிரசாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை இரவு மின் அலங்கார சப்பரத்தில் ஆகாசகாளியம்மன் வீதி உலா நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை நல்லமாங்குடி மற்றும் சிகாா்பாளையம் கிராம மக்கள், கோயில் அா்ச்சகா் எஸ். ஜெகநாதன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.