சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் தமிழக வாழ்வுரிமை கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய, மாநில அரசுகள் சமூகநீதியை பாதுகாக்க, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அனைத்து சாதியினருக்கும் அவரவா் மக்கள்தொகைக்கேற்ப கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலாளா் சீனிசெல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், கொரடாச்சேரி ஒன்றிய அமைப்பாளா்கள் ராஜேஷ், கண்ணன், மோகன், ரஞ்சித் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.