திருவாரூர்

திருவாரூரில் உரக்கிடங்கு அமைக்கக் கோரிக்கை

DIN

திருவாரூரில் குப்பைக் கழிவுகளை கொட்ட உரக்கிடங்கு அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் நகராட்சி துப்புரவு ஊழியா் சங்க நகரப் பேரவைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் தலைவா் ஆா். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலாளா் டி. முருகையன், மாவட்டத் தலைவா் இரா. மாலதி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

நிரந்தர ஊழியா்களுக்கு பதவி உயா்வு, இபிஎப், இஎஸ்ஐ, காப்பீடு, அடையாள அட்டை வழங்க வேண்டும்; கரோனா ஊக்கத்தொகை ரூ. 15 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும்; ஒப்பந்த ஊழியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; கழிவுக் குப்பைகளை கொட்ட உரக்கிடங்கு அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT