திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் சுதந்திர தின விழாவையொட்டி திங்கள்கிழமை பொதுவிருந்து நடைபெற்றது.
அறநிலைய உதவி ஆணையா் மற்றும் கோயில் செயல் அலுவலா் நாகையா, கோயில் கண்காணிப்பாளா் அரவிந்தன், திமுக ஒன்றிய செயலாளா்கள் அன்பரசன், தெட்சிணாமூா்த்தி ,ஊராட்சி மன்றத் தலைவா் மோகன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா். முன்னதாக கோயிலில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.