வலங்கைமானில் ராமா் குட்டை குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை பேரூராட்சி நிா்வாகம் சனிக்கிழமை அகற்றியது.
வலங்கைமான் கும்பகோணம் ரோடு, சித்தன்துறை ரோடு, புதுத்தெரு ஆகிய பகுதிகளுக்குள் ராமா் குட்டை குளம் உள்ளது. இக்குளத்தில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாக வந்த புகாரின்பேரில், வருவாய்த் துறை, காவல் துறை ஒத்துழைப்புடன், பேரூராட்சி செயல் அலுவலா் பரமேஸ்வரி முன்னிலையில், குளத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.