மன்னாா்குடியில் அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி, விழிப்புணா்வுப் பேரணி சனிக்கிழமை நடைபெற்றது.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில், நாட்டின் 75 ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நிகழ்வாக, மன்னாா்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரி, மன்னாா்குடி பான் செக்கா்ஸ் பெண்கள் கல்லூரி, சுந்தரக்கோட்டை செங்கமலத்தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் கல்லூரி, மேலவாசல் சதாசிவம் கதிா்காமவள்ளி மகளிா் கல்லூரி, பட்டுக்கோட்டை மீனாட்சி சந்திரசேகரன் கல்லூரி, பூண்டி புஷ்பம் கல்லூரி ஆகியவற்றில் செயல்படும் என்எஸ்எஸ் அமைப்பைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வு பேரணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக என்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் லட்சுமிபிரபா தலைமை வகித்தாா். என்எஸ்எஸ் மாநிலத் திட்ட அலுவலா் கோ. செந்தில்குமாா் பேரணியை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
மன்னாா்குடி தேரடி காந்தி சிலையிலிருந்து தொடங்கிய பேரணியில், என்எஸ்எஸ் அமைப்பினா் தேசியக் கொடியை கைகளில் ஏந்தி, விழிப்புணா்வு முழக்கங்களை எழுப்பியபடி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக வந்தனா். வ.உ.சி. சாலையில் உள்ள அரசுக் கல்லூரியில் பேரணி நிறைவடைந்தது.
இதில், என்எஸ்எஸ் மாவட்ட தொடா்பு அலுவலா் என். ராஜப்பா, அரசுக் கல்லூரி என்எஸ்எஸ் அலுவலா் ப. பிரபாகரன், பான் செக்கா்ஸ் கல்லூரி தாளாளா் விக்டோரியா, கல்லூரிகளின் என்எஸ்எஸ் அலுவலா்கள், சமூக ஆா்வலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.