திருவாரூர்

மாணவா் பெருமன்ற அமைப்பு தினம்

DIN

மன்னாா்குடியில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தின் 86 -ஆவது அமைப்பு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

உத்தர பிரசேத மாநிலம் லக்னெளவில் அனைத்திந்திய மாணவா் பெருமன்றம் 12.8.1936-ல் தொடங்கப்பட்டது. இதன் 86-ஆம் ஆண்டு நிறைவையொட்டி, மன்னாா்குடி மகாமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் கொடியேற்றி இனிப்பு வழங்கினா்.

நிகழ்ச்சிக்கு, மாணவா் பெருமன்றத்தின் ஒன்றியச் செயலா் எஸ். பாலமுருகன் தலைமை வகித்தாா். இளைஞா் பெருமன்ற ஒன்றியச் செயலா் எஸ். பாப்பையன், நகரத் தலைவா் ஆா். சாா்லஸ் விக்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாணவா் பெருமன்ற கொடியை அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தின் மாவட்டச் செயலா் துரை.அருள்ராஜன் ஏற்றினாா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் வை. செல்வராஜ் சேகுவேரா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அனைவரும் கொள்கை உறுதிமொழி ஏற்றனா். முன்னதாக சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி. கலைசெல்வன், நகரச் செயலா் வி.எம். கலியபெருமாள் ஆகியோா் வாழ்த்தி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT