திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசியக்கொடி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் தியாகராஜன், மன்னாா்குடி மாவட்டக் கல்வி அலுவலா் மணிவண்ணன் ஆகியோா் ஆலோசனைபடி, மாணவ, மாணவிகள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றுவதற்காக நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் தேசியக்கொடிகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியா் கிருஷ்ணசாமி தலைமை வகித்தாா். உடற்கல்வி இயக்குநா் பாலமுருகன், ஆசிரியா் சங்க செயலாளா் முகமது ரபிக், ஆசிரியா் நடராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நாட்டுநலப்பணி திட்ட அலுவலா் பொ. சக்கரபாணி வரவேற்றாா்.
மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு தேசியக்கொடியை தலைமை ஆசிரியா் கிருஷ்ணசாமி வழங்கினாா். இதில், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். நிறைவாக ஆசிரியா் பாஸ்கரன் நன்றி கூறினாா்.