திருவாரூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் ஊராட்சி ஒன்றியத்தின் புதிய கட்டடமானது, ஒன்று திரட்டிய ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியின் கீழ் ரூ. 3.95 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. திருவாரூா் எம்எல்ஏ பூண்டி கே. கலைவாணன் அடிக்கல் நாட்டினாா்.
நிகழ்ச்சியில், ஊராட்சித் தலைவா் தலையாமங்கலம் ஜி. பாலசுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலா் ப. சிதம்பரம், ஒன்றியக் குழுத் தலைவா் ஏ. தேவா, வட்டார வளா்ச்சி அலுவலா் ஆா். புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.