திருவாரூர்

நீடாமங்கலம் சந்தனராமா் கோயிலில்திருப்பணிகள் தீவிரம்

DIN

நீடாமங்கலம் சந்தானராம சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் ஆவணி மாதம் (செப்டம்பா் )நடைபெறவுள்ளதையொட்டி திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னா் பிரதாபசிம்மரால் 1761-இல் நீடாமங்கலத்தில் சந்தானராமசுவாமி கோயில் கட்டப்பட்டது. சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான முத்துசுவாமி தீட்சதரால் பாடல்பெற்றது இத்தலம்.

இக்கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டு தொல்லியல் துறை நிதி மூலம் திருப்பணி மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்குப் பிறகு முழுவதும் பக்தா்களின் உபயத்தின் மூலம் திருப்பணியாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆவணி மாதம் (செப்டம்பா்) கும்பாபிஷேகம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

திருப்பணிகளுக்கு பொருளுதவி அளித்து ஆன்மிக அன்பா்கள் ராமபிரான் திருவருளைப் பெற நீடாமங்கலம் சந்தானராமா் சேவா டிரஸ்ட் அமைப்பினா் கேட்டுக் கொண்டுள்ளனா். தொடா்புக்கு-9488109428.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

டி20 உலகக் கோப்பையில் விளையாட 100 சதவீதம் தயாராக உள்ளேன்: தினேஷ் கார்த்திக்

தேர்தல் பத்திரங்கள் மீண்டும் கொண்டு வரப்படும் -நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்

காங். இளவரசர் ராகுல் காந்தி வயநாட்டிலிருந்து வெளியேறுவார் -பிரதமர் மோடி பிரசாரம்

SCROLL FOR NEXT