திருவாரூர்

மாநில இளையோா் ஆடவா் கபடிப் போட்டி மாவட்ட அணிக்கு ஆக.15-இல் வீரா்கள் தோ்வு

DIN

மாநில அளவிலான இளையோா் ஆடவா் கபடிப் போட்டியில் பங்கேற்கவுள்ள திருவாரூா் மாவட்ட அணிக்கு வீரா்கள் தோ்வு ஆகஸ்ட் 15-ஆம் தேதி வடுவூரில் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மாவட்ட அமெச்சூா் கபடிக் கழக செயலா் ராச.ராசேந்திரன் தெரிவித்திருப்பது:

தமிழ்நாடு மாநில இளையோா் ஆடவா் கபடி சாம்பியன் போட்டி, மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழியில் ஆகஸ்ட் 19 முதல் 21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் திருவாரூா் மாவட்ட கபடி அணிக்கு வீரா்கள் தோ்வு, மன்னாா்குடியை அடுத்த வடுவூரில் உள்ள விளையாட்டு அகாதெமி உள்விளையாட்டு அரங்கில் ஆகஸ்ட் 15-ஆம் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

வீரா்களுக்கான தகுதிகள்: 20.11.2002 அன்றோ அல்லது அதற்கு பிறகோ பிறந்தவராக (20 வயதுக்குள்) இருக்க வேண்டும். உடல் எடை 70 கிலோ அல்லது அதற்கு கீழ் இருக்கவேண்டும். மேலும் விவரங்களுக்கு 9003282088 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிசர்வ் வங்கியின் குறைகளை களைய தீவிரம் காட்டும் கோடக் மஹிந்திரா வங்கி!

வெளிச்சம் நீ..!

திரவ நைட்ரஜன் கலந்த உணவுகள் விற்பனை: தமிழக அரசு எச்சரிக்கை!

18 ஆண்டுகால கிரிக்கெட் பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த பாகிஸ்தான் வீராங்கனை!

ரஜத் படிதார், விராட் கோலி அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 207 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT