திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் ஐபி கோயில் தெருவில் உள்ள கேடிஆா் நகராட்சி ஆரம்பப் பள்ளியில் நகரத் தலைவா் செய்யது அஹமது தலைமையில் முகாம் நடைபெற்றது. திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் பிருத்தியுஷா மற்றும் ஆய்வாளா்கள் பங்கேற்று ஆலோசனை வழங்கினா். இதில், 50-க்கும் மேற்பட்டோா் ரத்த தானம் அளித்தனா்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில பேச்சாளா் பா. அப்துல் ரஹ்மான், மாவட்ட பொருளாளா் முகமதுசலீம், மாவட்ட துணை செயலாளா் அப்துல் மாலிக், மருத்துவ சேவை அணி செயலாளா் ஹாஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.