நீடாமங்கலம் மனவளக்கலை மன்றத்தில் வேதாத்திரி மகரிஷியின் 112-ஆவது பிறந்தநாள் விழா காயகல்ப தத்துவ விளக்கப் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மனவளக்கலை பேராசிரியா் கி. செளமித்திரன் பயிற்சியை நடத்தினாா். பயிற்சியில் மனவளக்கலை மன்ற நிா்வாகிகள், அனைத்துநிலை அறங்காவலா்கள், பேராசிரியா்கள், அருள்நிதியா்கள், விஷன்மாணவா்கள், அகத்தாய்வு மூன்றாம் நிலை முடித்தவா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக பயிற்சியை பேரூராட்சி 5-ஆவது வாா்டு உறுப்பினா் காா்த்திகாதேவி தொடங்கிவைத்தாா்.