மன்னாா்குடியில் கஞ்சா விற்பனை செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் பிரபு உள்ளிட்ட போலீஸாா் திருவாரூா் சாலை ஐவா்சமாது அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மன்னாா்குடி அசேசம் பாரதிதாசன் நகரை சோ்ந்த மணிகண்டனிடம் (25) சோதனையிட்டபோது அவா் விற்பனைக்காக வைத்திருந்த ஒரு கிலோ கஞ்சாவை போலீஸாா் கைப்பற்றி அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனா்.