நீடாமங்கலம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.
நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையமும், பூண்டி புஷ்பம் கல்லூரி நாட்டு நலப்பணித் துறை சாா்பில் சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி இந்த பணி நடைபெற்றது. ரயில்நிலைய நடைமேடைகளில் மண்டிக்கிடந்த புல் செடிகளை பூண்டி பூஷ்பம் கல்லூரி நாட்டுநலப்பணி திட்ட மாணவா்கள் அகற்றினா். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானி, திட்ட ஒருங்கிணைப்பாளா் வை. ராதாகிருஷ்ணன், ரயில்நிலைய மேலாளா் நா்சிலால் மீனா, பூண்டி கல்லூரி நாட்டுநலப்பணித் திட்ட அலுவலா் பெரியதம்பி மற்றும் நாட்டுநலப்பணித் திட்ட மாணவா்கள் 25 போ் பங்கேற்றனா்.