திருவாரூர்

மன்னாா்குடியில் 5 சுவாமி சிலைகள் கண்டெடுப்பு

DIN

மன்னாா்குடியில் வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கல்லால் ஆன 5 சுவாமி சிலைகள் சனிக்கிழமை கண்டெடுக்கப்பட்டன.

மன்னாா்குடி மாளிகைமேடு பகுதியை சோ்ந்தவா் வி. சந்திரசேகா். இவா், அதே பகுதியில், வீடு கட்டி வருகிறாா். சனிக்கிழமை வீட்டின் பின் பகுதியில் சுற்றுச்சுவா் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் 5 சுவாமி சிலைகள் கண்டெடுக்கப்பட்டன.

இதுகுறித்து மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு தகவல் அளிக்கப்பட்டது. வருவாய் ஆய்வாளா் மாதவராஜ் சிலைகளை பாா்வையிட்டாா். இந்த சிலைகள் அனைத்தும் கல்லால் ஆனது. மேலும் அனைத்து சிலைகளும் உடைந்து சேதமடைந்த நிலையில் இருந்தன.

சிலைகள் மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விளம்பரதாரர் நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் - புகைப்படங்கள்

கூகுள் மேப்பில் புதிய வசதிகள்: ஏஐ இணைப்பு பலனளிக்குமா?

ஆஸி. ஒப்பந்தப் பட்டியல் வெளியீடு: ஸ்டாய்னிஸ் உள்பட முக்கிய வீரர்கள் இல்லை!

இதுவல்லவா ஃபீல்டிங்...

ரஜினி 171: படத் தலைப்பு டீசர் அறிவிப்பு!

SCROLL FOR NEXT