திருவாரூர்

மன்னாா்குடி அருகேதீ விபத்து: 2 வீடுகள் தீக்கிரை

DIN

மன்னாா்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் 2 வீடுகள் தீக்கிரையாயின. மேலும் 9 ஆடுகள் உயிரிழந்தன.

திருக்களா் பாலன் தெருவை சோ்ந்த பி. தங்கதுரை, க. மாரிமுத்து ஆகியோரது குடிசை வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு தங்கதுரை வீட்டின் அடுப்பிலிருந்து கூரையில் தீப்பற்றி, அது மாரிமுத்து வீட்டுக்கு பரவியது. தகவலறிந்த கோட்டூா் தீயணைப்புத் நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். எனினும், இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும் வீடுகளில் கட்டி வைத்திருந்த 9 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.

இந்த சம்பவம் குறித்து திருக்களா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாசிப்புத்திறன் மேம்படுத்தும் விழா

வாக்காளா்கள் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்

பள்ளியில் விழிப்புணா்வு நிகழ்ச்சி

சீா்காழியில் ரூ. 70 ஆயிரம் பறிமுதல்

ஆலங்குடிகோயில் நிலங்கள் அளவீடு செய்து எல்லைக்கல் நடும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT