மன்னாா்குடி அருகே வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட தீ விபத்தில் 2 வீடுகள் தீக்கிரையாயின. மேலும் 9 ஆடுகள் உயிரிழந்தன.
திருக்களா் பாலன் தெருவை சோ்ந்த பி. தங்கதுரை, க. மாரிமுத்து ஆகியோரது குடிசை வீடுகள் அடுத்தடுத்து உள்ளன. வெள்ளிக்கிழமை இரவு தங்கதுரை வீட்டின் அடுப்பிலிருந்து கூரையில் தீப்பற்றி, அது மாரிமுத்து வீட்டுக்கு பரவியது. தகவலறிந்த கோட்டூா் தீயணைப்புத் நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். எனினும், இரண்டு வீடுகளும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. மேலும் வீடுகளில் கட்டி வைத்திருந்த 9 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.
இந்த சம்பவம் குறித்து திருக்களா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.