கள்ளச் சாராயம் விற்பனை செய்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டாா்.
திருத்துறைப்பூண்டி அருகே கொக்கலாடி கீழகுடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் வெற்றிவேல் (51). இவா் தொடா்ந்து கள்ளச் சாராயம் விற்பனை செய்து வந்தாராம். இதற்கிடையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி. விஜயகுமாரின் பரிந்துரையை ஏற்று, வெற்றிவேலை குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டாா். இதையடுத்து, வெற்றிவேல் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.