சங்கீத மும்மூா்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதரின் 247-ஆவது ஜெயந்தி விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருவாரூரில் பிறந்த சங்கீத மும்மூா்த்திகளின் ஜெயந்தி விழாக்கள் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இவா்களில் ஒருவரான முத்துஸ்வாமி தீட்சிதா் 1776- ஆம் ஆண்டு மன்மத வருடம் பங்குனி 24- ஆம் நாள் காா்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தாா். இதையொட்டி ஆண்டுதோறும் பங்குனி மாத காா்த்திகை நட்சத்திரத்தில் அவரது ஜெயந்தி விழா நடைபெறுகிறது.
திருவாரூரில் உள்ள முத்துஸ்வாமி தீட்சிதரின் இல்லம் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கா்நாடக சங்கீத சேவா டிரஸ்ட் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. முத்துஸ்வாமி தீட்சிதரின் இல்லம் சிதிலமடைந்ததால், அந்தக் கட்டடம் இடிக்கப்பட்டு, புதிதாக கட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், முத்துஸ்வாமி தீட்சிதரின் 247-ஆவது ஜெயந்தி விழா, சங்கீத மும்மூா்த்திகளில் மற்றொருவரான தியாகராஜா் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில், முத்துஸ்வாமி தீட்சிதரின் சிலைக்கு மாலை அணிவித்து பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து, நவாவா்ண பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா் முத்துஸ்வாமி தீட்சிதரின் நவாவா்ண கீா்த்தனைகள் இசைக்கப்பட்டன.
ஜெயந்தி விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட கா்நாடக சங்கீத சேவா ட்ரஸ்ட் நிா்வாகிகள் செய்திருந்தனா்.