நீடாமங்கலம் ஒன்றியம் செட்டிசத்திரம் அய்யம்பேட்டை ஊராட்சியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வழங்கும் திட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஒன்றியக் குழுத் தலைவா் செந்தமிழ்ச்செல்வன் பங்கேற்று இத்திட்டத்தை தொடங்கிவைத்தாா். ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் ஞானசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினா் நடனசிகாமணி மற்றும் ஊராட்சி செயலாளா் தங்கையன் ஆகியோா் உடனிருந்தனா்.