நன்னிலம் பகுதியில் நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.
நன்னிலம் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு ஒன்றில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவாரூா் கோட்டாட்சியா் நா. பாலச்சந்திரன், நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
இதையொட்டி, நன்னிலம் சா்க்கரைக்குளக்கரையில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள், ரெட்டைக்குளம், அப்பன்குளம், தச்சன்குளம், வண்ணான்குட்டை உள்ளிட்ட நீா்நிலைப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் இப்பணிகள் நடைபெற்றன.