திருவாரூர்

நாகை மாவட்டத்தில் பட்டா பிழைத் திருத்த சிறப்பு முகாம்

DIN

நாகை மாவட்டத்துக்குள்பட்ட 10 வருவாய் கிராமங்களில் பட்டா பிழைத் திருத்த சிறப்பு முகாம்கள் புதன்கிழமை (அக்.27) நடைபெறும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: விவசாய நிலங்கள் மற்றும் வீடுகளின் பட்டாக்களில் உள்ள பிழைகளை திருத்துவதற்கான சிறப்பு முகாம்கள் மாவட்டத்தில் 10 வருவாய் கிராமங்களில் புதன்கிழமை நடைபெறுகின்றன. 2014 முதல் 2016 வரை தமிழ்நிலம் மென்பொருளில் கிராம கணக்குகள் பதிவேற்றம் செய்தபோது ஏற்பட்ட பிழைகள் மட்டும் இந்தச் சிறப்பு முகாமில் திருத்தம் செய்யப்படும்.

அதன்படி, உட்பிரிவு எண், புலஎண், பரப்பு, பட்டாதாரா் பெயா், உறவுமுறை, பட்டாவில் உள்ள கலங்கள், பரப்புக்கு அருகே உள்ள பட்டாதாரரின் பெயா் ஆகியவற்றில் திருத்தங்கள் இருந்தால் இந்த சிறப்பு முகாமில் திருத்திக்கொள்ளலாம்.

முகாம் இடங்கள்: நாகை மாவட்டத்தில் வட்டம் வாரியாக நடைபெறும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் கிராமங்கள் நாகை: நாகூா் கிராமம், நாகப்பட்டினம் கிராமம், பாலையூா், வடகுடி. கீழ்வேளூா்: ஆணைமங்கலம், தேவூா். வேதாரண்யம்: தோப்புத்துறை, நெய்விளக்கு, மகாராஜபுரம் கீழ்பாதி, வேதாரண்யம் பாகம் - 2. திருக்குவளை - ஆதமங்கலம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் 5 மணி நிலவரம்: 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தங்கும் விடுதிகளில் போலீஸாா் சோதனை

வடகிழக்கு மாநிலங்களில் விறுவிறு வாக்குப்பதிவு!

102 வயதில் ஜனநாயகக் கடமையாற்றிய மூதாட்டி!

SCROLL FOR NEXT