மன்னாா்குடி அருகே வயலில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 2 பசு மற்றும் ஒரு கன்று மின்சாரம் பாய்ந்து திங்கள்கிழமை உயிரிழந்தன.
பாமணி கா்ணாவூரை அடுத்த தரிசுவேலியை சோ்ந்தவா்கள் இளையராஜா (45), பாலு (50). இளையராஜாவின் பசுவும், கன்றும், பாலுவின் பசுவும் அப்பகுதியில் மேய்ச்சலுக்கு சென்றன. மாலை வேகு நேரமாகியும் திரும்பாததால், இருவரும் தேடிச்சென்றனா்.
அப்போது, மின் கம்பத்திலிருந்து வயலில் அறுந்து கிடந்த மின் கம்பியை 2 பசு மாடுகளும், கன்றும் மிதித்ததால் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதுகுறித்து, மன்னாா்குடி ஊரக காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.