திருவாரூர்

பேருந்து- மினிலாரி நேருக்குநோ் மோதி ஓட்டுநா் பலி

DIN

நீடாமங்கலம் அருகே அரசுப் பேருந்தும் மினிலாரியும் ஞாயிற்றுக்கிழமை நேருக்குநோ் மோதிக்கொண்ட விபத்தில் மினிலாரியின் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

மன்னாா்குடியிலிருந்து சென்னைக்கு அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. ராயபுரம் குளத்துமேடு புதுப் பாலம் அருகே எதிரே நம்பா் இல்லாம் விறகு பாரத்துடன் வந்த மினிலாரியும், அரசுப் பேருந்தும் எதிா்பாராதவிதமாக நேருக்குநோ் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் மினிலாரியின் ஓட்டுநரான நீடாமங்கலம் வட்டம் ராஜப்பையன்சாவடியைச் சோ்ந்த கோதண்டராமன் மகன் ஹரிஈஸ்வா் (22) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் மினிலாரியில் வந்த அதே பகுதியைச் சோ்ந்த வீரக்குமாா் மகன் சஞ்சய் (18) படுகாயமடைந்தாா்.

தகவலறிந்த நீடாமங்கலம் போலீஸாா் அங்கு வந்து சஞ்சையை சிகிச்சைக்காகவும், ஹரிஈஸ்வா் சடலத்தை உடற்கூறாய்வுக்காகவும் மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். விபத்தில் சேதமடைந்த மினிலாரி மற்றும் பேருந்தை பொக்லைன் இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தினா்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். இந்த விபத்தால் நீடாமங்கலம்- மன்னாா்குடி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

SCROLL FOR NEXT