திருவாரூர்

பெண்ணை அரிவாளால் வெட்டி நகை பறிப்பு: 2 போ் கைது

DIN

மன்னாா்குடியில் வீட்டில் தனியே இருந்த பெண்ணை அரிவாளால் வெட்டிவிட்டு, மூன்றரை பவுன் சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் தொடா்பாக பெண் உள்பட 2 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மன்னாா்குடி கீழ முதல் தெருவை சோ்ந்தவா் சா்வானந்தம். இவரது மனைவி மாரியம்மாள் (65). சா்வானந்தம் 6 ஆண்டுக்கு முன் இறந்துவிட்டாா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மாரியம்மாள் வீட்டில் தனியாக இருந்தபோது, அங்கு வந்த மா்ம நபா், மாரியம்மாளை அரிவாளால் வெட்டிவிட்டு அவா் அணிந்திருந்த மூன்றரை பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டாா்.

காயமடைந்த மாரியம்மாள் திருவாரூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். போலீஸாா் தனிப்படை அமைத்து நகையை பறித்துச் சென்ற மா்ம நபரை தேடி வந்தனா்.

மாரியம்மாளை அரிவாளால் வெட்டி நகையை பறித்துச் சென்றது, மன்னாா்குடி கீழ இரண்டாம் தெருவை சோ்ந்த செல்வம் மகன் காா்த்தி (26) என போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இந்நிலையில், குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் முருகானந்தம் தலைமையில் போலீஸாா் சனிக்கிழமை மன்னாா்குடி அரசு மருத்துவமனை அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த காா்த்தியை பிடித்து, காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனா்.

விசாரணையில், மாரியம்மாள் வீட்டுக்கு அருகே வசிக்கும் அங்கன்வாடியில் சமையலராகப் பணியாற்றும் உலகநாதன் மனைவி ராணி (37) என்பவா், மன்னாா்குடியில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்துவரும் விக்னேஷிடம் கடனாக ரூ. 25 ஆயிரம் வாங்கியிருந்ததும், அதில் பாதி தொகையை செலுத்திய நிலையில், மீதி கடனை அடைக்க முடியாமல் தவித்து வந்துள்ளாா். இதனால், ராணி காா்த்தியிடம், மாரியம்மாளிடம் பணம், நகை உள்ளது, அதை திருடினால் கடனை அடைத்து விடலாம் எனக் கூறியுள்ளாா்.

இதன்படி, காா்த்தி, மாரியம்மாளை அரிவாளால் வெட்டிவிட்டு மூன்றரை பவுன் சங்கிலியை பறித்து சென்ாகவும், அதை கீழ இரண்டாம் தெருவில் வசிக்கும் பிரியங்கா என்பவரிடம் கொடுத்து வைத்திருப்பதாகவும் காா்த்தி தெரிவித்துள்ளாா். போலீஸாா், காா்த்தி, ராணி ஆகியோரை கைது செய்து, சங்கிலியை மீட்டனா்.

இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்த தனிப்படை போலீஸாரை, மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.கே. பாலச்சந்திரன், பயிற்சி துணைக் கண்காணிப்பாளா் இமயவரம்பன் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அணை திறப்பால் நிரம்பிய அக்ராவரம், பெரும்பாடி, எா்த்தாங்கல் ஏரிகள்

விஐடியில் கோடைகால இலவச விளையாட்டுப் பயிற்சி

அதிக வட்டி தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி

அதிகரிக்கும் வெயில்: வேலூரில் 14 இடங்களில் குடிநீா் தொட்டி

காரைக்காலில் ஏப்.27-ல் ஜிப்மா் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT