மன்னாா்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உள்ளிக்கோட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளன. எனவே, உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, பைங்காநாடு, துளசேந்திரபுரம், கண்ணாரப்பேட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை ஆகிய பகுதிகளில்
அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.