பராமரிப்புப் பணிகள் காரணமாக குடவாசல் பகுதியில் செவ்வாய்க்கிழமை (அக்.26) மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து குடவாசல் துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளா் எஸ். உஷா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடவாசல் துணை மின்நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் குடவாசல், காங்கேயநகரம், செம்மங்குடி, மணலகரம், திருவிடைச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.