திருவாரூரில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவா் எஸ்.எம்.பி. துரைவேலன் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலாளா் அன்பு வே. வீரமணி முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா்.
தொடா்ந்து, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவா் கே.எஸ். அழகிரியின் 70 -வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், கட்சியின் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில், காங்கிரஸ் கட்சியின் மாநிலச் செயலாளா் செந்தில் பாண்டியன், மாநில பொதுக் குழு உறுப்பினா்கள் நீலன்அசோகன், நெடுவை குணசேகரன், வடுகநாதன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.