திருவாரூர்

இலவச குடிநீா் இணைப்புப் பணி தொடக்கம்

DIN

மன்னாா்குடியை அடுத்த சவளக்காரனில் ஜல் ஜீவன் மிஷன் மூலம் இலவச குடிநீா் இணைப்புக்கான பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

சவளக்காரனில் உள்ள 223 வீடுகளுக்கும் இலவச குடிநீா் இணைப்பு வழங்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான திட்டப்பணிக்கு ரூ.10.92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில், குடிநீா் இணைப்புக்கான பணியை மன்னாா்குடி ஒன்றியக் குழு துணைத் தலைவா் வனிதா அருள்ராஜன் தொடக்கி வைத்தாா். இதில், சவளக்காரன் ஊராட்சித் தலைவா் சாந்தி ராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT