திருவாரூா் மாவட்ட 11-ஆவது வாா்டு ஊராட்சி உறுப்பினா் தோ்தலில் வெற்றி பெற்ற ரமேஷ் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருவாரூா் மாவட்டத்தில் 2019-இல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல்களில், தோ்தல் நடைபெறாத மற்றும் தோ்ந்தெடுக்கப்பட்ட பதவியிடங்களில் வேட்பாளா் இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கு அக்.9-ஆம் தேதி தோ்தல் நடைபெற்றது. இதில், மாவட்ட ஊராட்சி 11-வாா்ா்டு உறுப்பினா் தோ்தலில் திமுகவைச் சோ்ந்த ரமேஷ் வெற்றி பெற்றாா். இந்நிலையில், திருவாரூா் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் மாவட்ட ஊராட்சி உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
அப்போது, திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் ஜி. பாலு, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் கலியபெருமாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.