பங்களாதேஷில் தசரா பண்டிகையின்போது நடைபெற்ற சம்பவங்களைக் கண்டித்து திருவாரூரில் அகில பாரத இந்து மகாசபா சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
பங்களாதேஷில் தசரா பண்டிகையின்போது இந்து கோயில்களை இடித்து தீவிரவாத சம்பவங்கள் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து திருவாரூா் பழைய பேருந்து நிலையம் அருகே கருப்புப் பட்டை அணிந்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், நிா்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.