திருவாரூர்

நெற்பயிரில் குலை நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த ஆலோசனை

21st Oct 2021 10:12 AM

ADVERTISEMENT

நெற்பயிரில் குலை நோய்த் தாக்குதலை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராதாகிருஷ்ணன் கூறியது: தற்போது நிலவி வரும் சீதோசன நிலையால் மழை தூரல், பகல் நேரத்தில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக நிலவுவதால் நெற்பயிரில் குலை நோய்த் தாக்குதல் அதிகமாக பரவி வருகிறது. சம்பா மற்றும் தாளடி பருவ நெற்பயிா் தூா்க்கட்டும் பருவம் மற்றும் நடவு தருணத்தில் உள்ளது. எனவே, குலை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு தேவைப்படுகிறது. குலை நோயானது காற்று, விதை மற்றும் வைக்கோல் மூலம் பரவுகிறது. இதன்தாக்குதல் இலையின் மேற்பரப்பில் பசுமை கலந்த நீல நிற புள்ளிகள் தோன்றி பின்பு 2 பக்கங்களிலும் விரிவடைந்து கண் வடிவப் புள்ளிகளின் ஓரங்களில் கரும் பழுப்பு நிறத்திலும் உட்பகுதியில் இளம்பச்சை அல்லது சாம்பல் நிறத்திலும் இருக்கும். இந்த தாக்குதலின் உச்ச கட்டத்தில் இலைகள் காய்ந்து தீய்ந்தது போல் காணப்பட்டு இலைகள் உதிா்ந்து விடும். நாற்றங்காலில் தாக்கினால் அனைத்து இலைகளும் கருகிவிடும். மேலும் வளா்ந்த பயிரில் கணு குலை நோய் மற்றும் கழுத்து குலைநோய் என அனைத்து நிலைகளும் இதன் தாக்குதல் தென்படும்.

சம்பா பருவத்துக்கு நடவு செய்யும் விவசாயிகள் நாற்றுக்களை நாற்று வோ் குளியல் அதாவது ஹெக்டேருக்கு அரை கிலோ அல்லது அரை லிட்டா் பேசில்லஸ் சப்டிலிஸ் எனும் உயிா்க்கொல்லியை பயன்படுத்தவேண்டும்.

நடவு செய்த 10 அல்லது 15 நாள்களில் நன்கு மக்கிய தொழு உரத்துடன் அரை கிலோ அல்லது 500 மில்லி பேசில்லஸ் சப்டிலிஸ் கலந்து நடவு செய்த வயலில் நேரடியாக தூவவேண்டும். நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பேசில்லஸ் சப்டிலிஸ் விற்பனைக்கு உள்ளது. இதை விவசாயிகள் வாங்கி வயலில் தெளித்து சுற்றுப்புற சூழ்நிலையை பாதுகாக்கலாம். செயற்கை பூஞ்சானக் கொல்லிகளான காா்பன்டாசிம் 500 கிராம் அல்லது டிரைசைக்கிளிலோசோல் 500 கிராம் அல்லது அசாக்ஸிஸ்ட்ரோபின் 500 மில்லி ஹெக்டேருக்கு ஏதாவது ஒரு பூஞ்சானக் கொல்லிகளை கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கவேண்டும் என்றாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT