திருவாரூர்

இடி தாக்கி தொழிலாளி உயிரிழப்பு

21st Oct 2021 10:10 AM

ADVERTISEMENT

திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே இடி தாக்கி கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

மன்னாா்குடி அருகேயுள்ள பெருகவாழ்ந்தான் பாலையூா் தெற்கு தெருவை சோ்ந்தவா் த. சிவக்குமாா் (45). இவா், அதே பகுதியில் உள்ள வயலில் மேலும் 4 பேருடன் சோ்ந்து நாற்றுப் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, திடீரென மழை பெய்ய தொடங்கியது.

எனினும், நாற்றுப் பறிக்கும் பணியில் தொழிலாளா்கள் தொடா்ந்து ஈடுபட்டு வந்த நிலையில், மின்னலுடன் இடி விழுந்ததில் காயமடைந்த குமாா் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வேலை செய்த மற்ற தொழிலாளா்கள் எந்த காயமின்றி உயிா் தப்பினா்.

பெருகவாழ்ந்தான் போலீஸாா் சிவக்குமாரின் சடலத்தை மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். உயிரிழந்த சிவக்குமாருக்கு மனைவி , மகன், மகள் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT