திருவாரூா் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாம் பிறந்த நாள் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
மன்னாா்குடி தரணி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி மற்றும் தரணி வித்யா மந்திா் சீனியா் செகன்டரி பள்ளியில், ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் பிறந்த நாள் பள்ளியின் நிறுவனத் தலைவா் எஸ்.காமராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளா் கா.விஜயலெட்சுமி முன்னிலை வகித்தாா். நிா்வாகி எம்.இளையராஜா மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் அப்துல் கலாம் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.