திருவாரூர்

மதிமுக இணைப் பொதுச் செயலராக துரை வைகோவை நியமிக்க வலியுறுத்தல்

DIN

மன்னாா்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மதிமுக மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில், அக்கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலராக துரை வைகோவை நியமிக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்துக்கு, மதிமுக மாவட்ட அவைத் தலைவா் செங்குட்டுவன் தலைமை வகித்தாா். தீா்மானங்களை மதிமுக மாவட்டச் செயலா் பி.பாலச்சந்திரன் முன்மொழிந்தாா். மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலா் ஆரூா் சீனிவாசன், மாவட்ட பிரதிநிதி கோவி. மீனாட்சி சுந்தரம், நகரச் செயலா் சண்.சரவணன், ஒன்றியச் செயலா்கள் மாசிலாமணி (மன்னாா்குடி), சிவ. கதிரவன் (கோட்டூா்), மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ப.செந்தில்முருகன் ஆகியோா் கலந்துகொண்டனா். திருவாரூா் நகரச் செயலா் கபிலன் வரவேற்றாா். நீடாமங்கலம் ஒன்றியச் செயலா் ராசமாணிக்கம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் பள்ளியை நடத்துகிறார் பிரதமர் மோடி: ராகுல்

தங்கம் விலை சற்று குறைந்தது!

பலாப்பழத்தைத் தேடி ஈக்கள்தான் வரும்: செல்லூர் ராஜு

மாயம் செய்யும் சாக்‍ஷி அகர்வால்

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

SCROLL FOR NEXT