மன்னாா்குடி துணைமின் நிலையத்தில் தொழில்நுட்ப பணிகள் நடைபெற இருப்பதால், இப்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபா் 17) மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மன்னாா்குடி, அசேசம், சுந்தரக்கோட்டை, மேலவாசல், நெடுவாக்கோட்டை, செருமங்கலம், பருத்திக்கோட்டை, மூவாநல்லூா், நாவல்பூண்டி, கோரையாறு, கா்ணாவூா், சித்தேரி, கூத்தாநல்லூா், வடபாதிமங்கலம் ஆகிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிமுதல் மாலை 4 மணிவரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும் என உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்துள்ளாா்.